
சொந்தம் கொண்டாட என் ஜீவன் மன்றாடுதே
மழை வரும் போதெல்லாம் நீ வர வேண்டுமே
என் கெஞ்சும் என் கெஞ்சல்
உனை பதம் பார்க்குமே
தினம் இதம் சேர்க்குமே
என் கூந்தல் வாசம் உன் மீசை தீண்ட
நாட்கள் மாதம் வருடம் என் நீள்கின்றதே
நான் கொண்ட நேசம் என் ஆயுள் தீண்டி
உந்தன் ஜீவன் தாங்கி தானும் உலகாளுமே
கண்ணே நானிருந்தேன் கானல் நீராக
அன்பே நீ வந்தாய் என்னுள் வேராக
வாழும் நொடி தோறும்
நானுந்தன் நிழலாகவே
வந்தேன் நிஜமாகவே
உன்னோடு நானும் என்னோடு நீயும்
கைகள் கோர்க்கும் நாளில் எந்தன் காயம் ஆறும்
இரவாக வந்து நிலவாக நின்று
ஒட்டிக் கொண்டு நின்றால் எந்தன் தாகம் தீரும்
அன்பே நீ அறிவாய் என் வாழ்வே நீயென்று
அதனால் தேவையில்லை தனியே ஒளியென்று
நீ முகம் சோர்ந்தால்
என் நெஞ்சம் தாங்காதடா
நேசம் தீராதடா.
No comments:
Post a Comment