Saturday, July 17, 2010
69.இயற்கை செய்கிற லீலை.
சொல்லாமல் தொக்கி நிற்கும் காதல்
கொல்லாமல் கொல்லுமது சாதல்
பொல்லாத வேதனையின் தஞ்சம்
சொல்லத்தான் ஏங்குகிற நெஞ்சம்
ஒரு போருக்கு நாம் செல்வதைப் போல்
இந்த காதலினை சொல்வதுதான்
இதில் வெற்றியும் தோல்வியும்
இயற்கை செய்கிற லீலை..
நட்பின் பயணம் காதலைத் தொடலாம்
இரண்டும் இணைந்திடலாம்
காதல் நதியினிலே காயம் கழுவிடலாம்
கண்களில் கசியும் காதலினை
நெஞ்சம் சிறிதும் அறியாதா?
புறக்கணித்தால் என்னாகும்?
என்றேதான் மனம் எண்ணி புதைகிறதே..
காதலின் முன்னே கடவுளும் என்ன?
வலிகள் வதைத்திடுமே
உள்ளம் சிதைந்திடுமே உயிரும் உறைந்திடுமே
பெண்ணின் மனது ஆழமென்று
பலபேர் இங்கு சொல்வதுண்டு
ஆண்மனதும் ஆழம் தான்
அறிந்திடத்தான் வழியிங்கு பிறந்திடுமா?..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment